TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANA KANKALAI
-
- Kids & Family
-
பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய
மொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது
தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய
தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்
- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.
-
கம்பனும் அப்பரும் வேண்டுதல் ஒலி வடிவம் சரவணன் அருணாச்சலம்
கம்பனும் அப்பரும் வேண்டுதல்
ஒலி வடிவம் சரவணன் அருணாச்சலம் -
திருநீற்றுப் பதிகம் திருநாவுக்கரசர் அருளியது வழங்குபவர் சரவணன் அருணாச்சலம்
திருநீற்றுப் பதிகம் திருநாவுக்கரசர் அருளியது
வழங்குபவர் சரவணன் அருணாச்சலம் -
கோயில்-2 சிதம்பரம் ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் அருளியது .பாடலும் பொருளும் வழங்குபவர் சரவண
கோயில்-2 சிதம்பரம் ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் அருளியது .பாடலும் பொருளும் வழங்குபவர் சரவணன் அருணாச்சலம்
-
கோயில் சிதம்பரம் ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் அருளியது பாடலும் பொருளும் ஒலி வடிவம் சரவணன்
கோயில் சிதம்பரம் ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் அருளியது பாடலும் பொருளும் ஒலி வடிவம் சரவணன் அருணாச்சலம்
-
சண்டிகேஸ்வரர் ஆன்மீகம் அறிவோம் வழங்குபவர் சரவணன் அருணாச்சலம்
சண்டிகேஸ்வரர் ஆன்மீகம் அறிவோம்
வழங்குபவர் சரவணன் அருணாச்சலம்
*சண்டிகேஸ்வரர்*
சிவபெருமானின் பிரதிநிதியான சண்டிகேஸ்வரரை வில்வ இலை கொண்டு மாலைகள் சூட்டி வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களும் பெறலாம்.
*வேண்டுதல்களை நிறைவேற்றும் சண்டிகேஸ்வரர் வழிபாடு !*
சிவ தலங்களில் நந்தியம் பெருமானும், சண்டிகேஸ்வரரும் கட்டாயம் இடம்பெறுவார்கள்.
நந்தியின் காதுகளில் நம் வேண்டுதல்களை கூறினால் பலிக்கும் எனும் நம்பிக்கை கொண்டவர்கள், ஏன் சண்டிகேஸ்வரரிடம் மட்டும் சப்தம் போடாமல் வேண்ட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா?
*சிவனின் மெய்க்காவலர் நந்தி என்றால், ஈசனின் ஆலயக் காப்பாளர் சண்டிகேஸ்வரர்*
பொதுவாகவே கோவில்களுக்கு சென்றால் நாம் அங்கு தேவைப்படும் சேவைகளை மட்டுமே செய்ய வேண்டும். அங்கு இருக்கும் எந்தப் பொருளுக்கும் ஆசைப்படுவதோ, அதை தனக்குரியதாக்கி எடுத்து வருவதோ நல்லதல்ல.
சிவனின் உதவியாளரான சண்டிகேஸ்வரர், எந்நேரமும் சிவ சிந்தனையில் ஆழ்ந்து தியானத்தில் இருப்பவர்.
மனிதனுக்கு கேட்கும் திறன் கொண்ட காதுகளைப்போல் சிவனின் ஆலயத்தில் சண்டிகேஸ்வரர் குடிகொண்டிருக்கும் இடம் இறைவனின் செவியாகிறது.
இறைவனிடம் நாம் வேண்டுவதை அவரின் உதவியாளரான சண்டிகேஸ்வரர் தியானத்திலேயே கேட்டு உணர்ந்து, அவைகளை அவரவர் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப கணக்கெழுதி இறைவனிடம் சமர்பிப்பதாக ஐதீகம்.
ஆகவே தான் சிவன் கோவில் சென்றால் இவரைப் பார்க்காமல் செல்லக்கூடாது என்பார்கள்.
யோக நிலையில் உள்ள இவரை வணங்கினால் நல்ல பேச்சுத் திறனுடன், நினைவாற்றலும் பெருகி அறிவு வளரும்.
எந்நேரமும் கண்மூடி சிவசிந்தனையில் இருக்கும் இவரின் தியானம், நம்மால் கலைந்து விடக் கூடாது என்றே அவரை அமைதியாக வணங்குமாறு அறிவுத்துகின்றா -
கோமுக தீர்த்தம் வழங்குபவர் சரவணன் அருணாச்சலம்
கோமுக தீர்த்தம்
வழங்குபவர் சரவணன் அருணாச்சலம்
*கோமுக தீர்த்தம் என்றால் என்ன?*
*சகல தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ உதவும் கோமுக தீர்த்தம் ...
கோவில்களில் தெய்வங்களுக்கு அபிஷேக அரிய பல புண்ணிய திரவிய பொருட்களில் சில சாதாரணமாக கிடைக்க கூடிய ஒன்றாக இருக்கிறது.
அவற்றில் திருத்தலங்களில் தெய்வ கருவறையில் இருந்து வெளியேற கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் கோமுகமும் மகா தீர்த்தம் இந்த கோமதி ஒன்றாகும்...
இந்த கோமுகத்திலிருந்து வரும் புனித தீர்த்தம் மிகுந்த சக்தி வாய்ந்தது.
கோவிலுக்கு செல்லும் போது பலர் இந்த கோமுகத்திலிருந்து கிடைக்கும் புனித நீரை தலையில் தெளித்து கொள்வதை நாம் பார்த்திருப்போம்.
சிலர் பிடித்து கொண்டு வீட்டிற்கும் எடுத்து செல்வர்...
இன்னும் சிலர் பார்ப்பதற்கு அசுத்தமாக தெரிவதால் என்னவென்றே தெரியாமல் முழித்து விட்டு சென்று விடுவர்.
கோவில் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வ சிலைகளுக்கு செய்யப்படும் அபிஷேக பொருட்கள் இறைவனின் திருமேனி மீது பட்டு வழிந்து கருவறையிலிருந்து இந்த கோமுகம் வழியாக தான் வெளியேறும்.
இங்கு பற்பல கோடி தேவதைகள் குடி கொண்டிருப்பதாக வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
🕉️☘️🌹🌻🔷🔥🔷🌻🌹☘️🕉️
பூமியில் ஓடும் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளின் பலன்களை விட இந்த கோமுக தீர்த்தம் மிகவும் மகிமை வாய்ந்தது...
இந்த புண்ணிய நதிகளே கோமுக தீர்த்தத்தை தெளித்து தூய்மை அடைவதாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கோவிலுக்கு செல்லும் போது கோமுக நீரை தெளித்து கொள்வதால் நம்மிடம் இருக்கும் தீவினைகள் ஒழிந்து மனம் சுத்தமாகும் என்பது ஐதீகம்.
விசாக நட்சத்திரத்தன்று இந்த புனித தீர்த்தத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து கொண்டு சென
Customer Reviews
Very good
மிக அருமை. தொடரட்டும் தங்கள் சேவை.