Description
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பற்றித் தமிழில் எழுந்த நூல்களைப் போன்றே வடமொழியிலும் சில நூல்கள் எழுந்துள்ளன. கி.பி 8 -12 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதான அட்டப்பிரகரணம் எனும் தொகுப்பிலுள்ள எட்டு நூல்களை அவ்வகையுள் குறிப்பிடலாம். அவை,
தத்துவப் பிரகாசிகை
தத்துவ சங்கிரகம்
தத்துவத் திரய நிர்ணயம்
இரத்தினத் திரயம்
போக காரிகை
நாத காரிகை
மோட்ச காரிகை
பரமோட்ச நிராச காரிகை
என்பனவாகும்