Description
மாதவச்சிவஞான முனிவரின் வரலாற்றைத் திருவாவடுதுறை ஆதீனப்புலவர் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் ஒரு புராணமாக விரிவாகப்பாடுவதற்குத் தொடங்கினார் எனத் தெரிகின்றது.
இதுவரை மாதவச் சிவஞான முனிவர் தமிழுக்கும், சித்தாந்த சைவத்துக்கும், திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் பலவகையாலும் புகழ்மிகுமாறு தொண்டாற்றி வாழ்ந்த திறம் ஒருவாறு சுருக்கமாக எழுதப்பட்டது. இத்தகைய சிறப்பு மிக்க மாதவச் சிவஞான முனிவரைச் சித்தாந்த சைவர்கள் பல வகையாலும் நினைவு கூறக் கடமைப்பட்டவர்கள் என்பது இதனால் ஒரளவு விளங்கும். இம்முனிவர் பெருமானின் திருவுருவத்தைப் சிவாலயங்களில் சந்தானாசாரியர்களை அடுத்து எழுந்தருளச் செய்து நாள் வழிபாடும் குருபூசையும் செய்தல் வேண்டும்