Description
பாண்டிவள நாட்டிலே, பொதியமலைச் சாரலிலே, பாவநாசம் என்னும் திருப்பதியைச் சார்ந்த விக்கிரமசிங்கபுரத்திலே, அகத்திய மாமுனிவரிடத்தே எழுதலைமுறை அளவும் அருட்புலமை நிரம்பும் வண்ணம் வரம் பெற்ற பரம்பரைச் சைவ வேளாளர் குலத்திலே, சிவபத்தி அடியார் பத்திகளில் சிறந்தவரும் கல்வி செல்வம் என்னும் இரண்டும் ஒருங்குடையவரும் ஆகிய ஆனந்தக் கூத்தர் என்பவர் ஒருவர் இருந்தார்.
அவர் மனைவியார் கற்பிலே தமக்கு உயர்வு ஒப்பில்லாத மயிலம்மையார் என்று எவராலும் சிறப்பித்துச் சொல்லப்படுபவர்.