Description
அவரது திருவயிற்றிலே, ஏழாவது தலைமுறையாகத் தமிழ்நாடு செய்த தவத்தானே, ஒரு சற்புத்திரர் திருவவதாரம் செய்து முக்களாலிங்கர் என்னும் பிள்ளைத் திருநாமம் சாத்தப் பெற்று ஒழுக்கம் அன்பு அருள் முதலிய நற்குணங்களோடு வளருவார் ஆயினார்.
பின்பு முக்களாலிங்கர் ஐந்து பிராயத்திலே, பிதாவினாலே வித்தியாரம்பம் செய்விக்கப் பெற்றுப் பள்ளிக் கூடத்தில் அமர்ந்து கற்பாராயினார்.
அங்ஙனம் கற்கும் காலத்திலே, திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து சிவஸ்தலயாத்திரையாகப் புறப்பட்ட சில முனிவர்கள் விக்கிரமசிங்கபுரத்து வீதியிலே சென்றார்கள்.