Description
நாட்டைக் கட்டமைத்தவர்கள் வகுத்துத் தந்த பாதைகளில் இருந்து நாடுகள் விலகிச் செல்கின்றன என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் சில தினங்களுக்கு முன் பேசியிருந்தார். தங்கள் நாட்டிலும் அதுபோன்றவர்கள் இருந்தார்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் தனது சொந்த தந்தை லீ குவான் யூவை குறித்தே அவர் பேசியிருந்தார். இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளைப் போல தங்கள் நாடும் பாதை விலகிச் சென்று விடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.