வார்த்தைகளை வாளாக வார்த்தவன்; மொழியைத் தேனாக வடித்தவன்; எதிரிகளைக் கவிதையால் அடித்தவன்; கம்பீரத்தால் காலங்கள் கடந்தவன். அவன் – பாரதிதாசன். “காலத்துளி” நிகழ்ச்சி வழி அவர் குறித்த தகவலை முன்வைக்கிறார் றைசெல்.
நாயிகா – ஒரு நாட்டியப் பெண் என்ற மேடை நிகழ்வு சிட்னியின் Belvoir அரங்கில் நடைபெறுகிறது. இது குறித்து அந்த நிகழ்வின் இயக்குனர் நித்தியா நாகராஜன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.