Episodes
ராணி விக்டோரியா இந்தியர்களை பற்றி எழுதிய அரிதான கடிதம் உங்களுக்காக .. Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
கருணாநிதியும் ஜெயலலிதாவும் திராவிட கட்சிகளின் நிறுவனர்கள் அல்ல... Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
இதற்கு பிறகும் எம்.ஜி.ஆர் அவர்களை கூட்டத்தில் வைத்துக்கொள்ளக்கூடாது என்று கருணாநிதி முடிவெடுத்தது எதனால்? தெரிந்துக்கொள்ள கேளுங்கள் பெரியோர்களே தாய்மார்களே 86 Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
கருணாநிதியின் 50 ஆண்டுக்கால சட்டமன்ற பொன்விழாவை தமிழக சட்டமன்றத்தின் மைய மண்டபத்துக்குள் தான் கொண்டாடவேண்டுமா ? அதற்கு வரமறுத்த அப்துல்கலாமை கருணாநிதி அடித்த கிண்டல்கள் மறக்க கூடியதா ? அவர்களை எல்லாம் மிஞ்சிவிட்டார் ஜெயலலிதா . Listen to Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a series about politics! Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
ஜெயலலிதா மிடாஸ் நிறுவனத்தையும், கருணாநிதி தனது சகாக்களிடம் இருக்கும் நிறுவனங்களையும் இழுத்து மூடிவிட்டு தேர்தலைச் சந்திப்பதுதான் சரியானது. மேடையில் வாக்குறுதிகள் கொடுப்பதாலோ, தேர்தல் அறிக்கையில் சொல்வதாலோ இவர்களை நம்பமுடியாது Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
சென்னை சட்டக் கல்லூரியில் வைத்துத்தான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் முதன் முதலாகச் சந்தித்தனர். இரண்டு பேருமே சட்டம் படித்தவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம். சென்னை சட்டக் கல்லூரியின் ஆண்டு விழாவில் பரதநாட்டியம் ஆட 12 வயதில் ஜெயலலிதா வந்திருந்தார். அன்றைய சிறப்பு அழைப்பாளர் எம்.ஜி.ஆர். Listen to Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a series about politics! Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
பெங்களூர் சாம்ராஜ்நகரில் இரண்டு வீடுகள்! ஒரு வீடு பேலஸ் மாதிரி பெரியது. இன்னொன்று அடக்கமான சிறிய வீடு. ஒரு வீட்டின் பெயர் ஜெய விலாஸ். இன்னொரு வீட்டின் பெயர் லலித விலாஸ் ஜெய விலாஸில் இருந்த ஜெயமும், லலித விலாஸில் இருந்த லலிதமும் பிரித்துச் சேர்க்கப்பட்ட பெயர்தான் ஜெயலலிதா. Listen to Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a series about politics! Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
நீரும் நெருப்பும்’ படத்தின் வெளியீட்டு விழா சென்னை தேவி திரையரங்கத்தில் நடந்தது. படத்தை வெளியிட்டுப் பேச அன்றைய முதலமைச்சர் கருணாநிதி வந்திருந்தார். படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர். Listen to Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a series about politics! Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
1971 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அமைந்த அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பைக் கேட்டார் எம்.ஜி.ஆர். ‘‘நீங்கள் சினிமாவில் நடிப்பதை விட்டுவிடுங்கள்’’ என்றார் முதலமைச்சர் கருணாநிதி. மறுத்தார் எம்.ஜி.ஆர். Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
பெரியோர்களே... தாய்மார்களே! - 78 | எம்.ஜி.ஆருக்கு முன்னும் பின்னும் எந்த முகமும் அந்த ஈர்ப்பை அடைந்தது இல்லை. சிவப்பும் மஞ்சளும் வெள்ளையும் சேர்ந்து குழைத்த தேகத்தால் மக்களை மயக்கி வைத்திருந்தார் மெனகத் கோபால மேனன் ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர்.! Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
பெரியோர்களே... தாய்மார்களே! - 77 | ‘தம்பி வா! தலைமை ஏற்க வா!’ என்று அண்ணாவால் அழைக்கப்பட்டு பொதுச்செயலாளர் ஆக்கப்பட்ட நெடுஞ்செழியனுக்கு கருணாநிதிக்கு தம்பியாக இருக்க மனம் இடம் தரவில்லை. Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
பெரியோர்களே... தாய்மார்களே! - 76 | அதுவரை தமிழகம் கேட்காத குரல்; அதுவரை தமிழகம் உணராத தமிழ்; அதுவரை அண்ணா பார்க்காத ஆள். கருணாநிதியின் வெற்றி இந்த மூன்றில்தான் இருக்கிறது. ‘‘உங்கள் கல்லறையில் என்ன எழுதப்பட வேண்டும்?” என்று நினைக்கிறீர்கள் என்று கருணாநிதியிடம் கேட்கப்பட்டபோது, ‘‘ஓய்வில்லாமல் உழைத்தவன் இங்கு ஓய்வுகொள்கிறான்” என்று எழுதச் சொன்னவர் கருணாநிதி. Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
பெரியோர்களே தாய்மார்களே! 75 | ‘‘காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே ஒரு லட்சியத்துடன் யாரும் எங்களோடு வரலாம், அவர்கள் எங்களோடு உடன்பாடான கொள்கை கொண்டவர்களாகவும் இருக்கலாம், எதிர் கொள்கை கொண்டவர்களாகவும் இருக்கலாம்’’ என்று அண்ணா அன்று போட்டுக்கொடுத்த சூத்திரம்தான் இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது. Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
பெரியோர்களே தாய்மார்களே! 74 | திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதற்கும் ஆட்சியைப் பிடித்ததற்கும் இடைப்பட்ட 18 ஆண்டு காலம் என்பது ஒவ்வோர் அரசியல்வாதியும் கற்றுக்கொள்ள வேண்டிய பாலபாடம். 18 ஆண்டு காலமும் பாரத யுத்தம்போல் நடத்தியதால்தான் அரியணையில் அண்ணாவால் உட்கார முடிந்தது. Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
பெரியோர்களே... தாய்மார்களே! - 73 | இந்திக் கிளர்ச்சியை விட விலைவாசி உயர்வு எல்லா மக்களையும் கோபப்படுத்தியது. ‘‘பக்தவத்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சு? காமராஜர் அண்ணாச்சி கடுகு விலை என்னாச்சு?” என்ற முழக்கங்கள் தெருவெல்லாம் தெறித்தன. மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள் .. Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
பெரியோர்களே... தாய்மார்களே! - 72 | தமிழகம் ரத்தத்தில் தோய்ந்த ஆண்டு 1965. இனத்தின் விழியாம் மொழியைக் காக்க, உயிராம் உயிரைத் தந்த ஆண்டு.மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள் .. Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
பெரியோர்களே தாய்மார்களே! Ep-71 |கலைஞர் கருணாநிதி, பல நிர்வாக நுணுக்கங்களை, சட்டசபை வாதத் திறமைகளை பக்தவத்சலத்திடம் இருந்துதான் கற்றுக்கொண்டார்.. Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
பெரியோர்களே தாய்மார்களே! Ep-70 | தமிழர் வாழும் நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டச்சொல்லி கோரிக்கை வைத்து அதற்காக 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர் யார் ? தெரிந்துக்கொள்ளுங்கள் .. Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
ஒரு விபரீத யோசனை நேருவுக்கு எதனால் வந்தது? யாரால் வந்தது என்று இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ‘இந்தியாவை ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப் போகிறேன்’ என்று திடீர் பிரகடனம் செய்தார் அவர். கிழக்கு மாகாணம், மேற்கு மாகாணம், வடக்கு மாகாணம், தெற்கு மாகாணம், மத்திய மாகாணம் என்று அதற்குப் பெயர்களும் சூட்டினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாகாணங்கள் சேர்ந்து ஒரே மாகாணமாக, ‘தெற்கு மாகாணமாக ஆக்கப்படும்’ என்றார். அவரது மொழியில் சொல்லப்போனால் அதற்கு, ‘தட்சிணப் பிரதேசம்’ என்று...
Published 08/29/22
சென்னை மாநகரே ஆந்திராவுக்குப் போயிருந்தால்...? நினைக்கவே நெஞ்சு அடைக்கிறது! தமிழ்நாடு தலை இல்லா நாடாக இருந்திருக்கும். ‘வட வேங்கடம் என்பது தமிழர் பகுதியே. அதனை விடமாட்டோம்’ என்றார் ம.பொ.சி. திருத்தணி தொடங்கி திருப்பதி வரைக்கும் போராட்டக்களமாக மாற்றினார். சென்னையை ஆந்திர மாநிலத்துக்குக் கொடுக்க வேண்டும் என்று போராடுபவர்களின் வீட்டுக்குத் தண்ணீர் தர மாட்டேன். அவர்கள் செத்தால்கூட, புதைக்க சென்னையில் இடம் கிடையாது” என்று பகிரங்கமாக அறிவித்தார். Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
கன்னியாகுமரி கேரளாவுக்குப் போயிருந்தால், 133 அடியில் வான்புகழ் வள்ளுவனுக்கு சிலை வடித்திருக்க முடியாது.சிலம்பு, வர்மக் கலையை தமிழ் மக்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களைப் போராடத் தூண்டினார்கள். ‘அடித்தால் திருப்பி அடி’ என்று கற்றுக்கொடுத்த அப்பாவு ஆசான் 1956 நவம்பர் முதல் நாளுக்கு முன்னாள் வரை கன்னியாகுமரி மாவட்டமும் செங்கோட்டையும், தமிழ்நாட்டில் அதாவது அன்றைய சென்னை மாகாணத்தில் இல்லை. Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
நாடு வளர்ந்துகொண்டு இருந்தது குறித்த பெருமை காமராஜருக்கு இருந்தாலும் கட்சி தேய்ந்து கொண்டு வருகிறது என்ற கவலை அவரை வாட்டியது. தொடர்ச்சியாக ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் அது சுயநலச் சக்திகளால் சூழப்பட்டுவிடும் என்பதை காமராஜர் தனது காலத்திலேயே பார்த்தார். கட்சியின் முக்கியத் தலைவர்கள் எல்லாம் நிர்வாகம் செய்யப் போய்விட்டதால் கவனிப்பாரற்று கட்சி கிடப்பதை உணர்ந்தார். அவரது மனதில் உதித்தது ‘K’ பிளான். Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி போகும்போது பள்ளத்தில் கார் உருண்டு காமராஜருக்கு பயங்கர காயம். ரத்தம் ஒழுகியது. லேசாக நினைவு திரும்பியதும் ‘தென்னகம்’ ஜி.ஆனந்தனை அழைத்து, ‘இந்த விபத்துச் செய்தியை பெருசா போடாதேண்ணேன்’ என்றார். காமராஜர் போபால் வருகிறார் என்பதைத் தெரிந்துகொண்டு ‘மெயில்’ இதழில் அவரை பாராட்டி கணபதி எழுதினார். போபால் வந்த காமராஜர், கடுமையாக அவரை கோபித்துக் கொண்டார். ‘நீங்கள் அதிர்ச்சி அடையறது மாதிரி நான் ஏதும் எழுதலையே’ என்றார் கணபதி. ‘என்னைப் பாராட்டி எதுக்கு எழுதுறீங்க?...
Published 08/29/22
‘‘எந்தச் சொத்தும் இல்லாதவர்க்கு கல்வி ஒரு சொத்தாகும். கல்வி என்ற சொத்தைப் பெற்றுவிட்டால் வறுமை தானாகவே ஒழிந்துபோகும்” என்றார் காமராஜர். சமூக, அரசியல், பொருளாதாரக் காரணங்களுக்காக ஒடுக்கப்பட்ட மக்கள் மனதில், உடலில், குடும்பத்தில் தன்னம்பிக்கை ரத்தம் பாய்ச்சுவதற்கு காமராஜர் காலம் பயன்பட்டது. இன்று டாஸ்மாக் கடைகளை நடத்தும் அரசாங்கம், பள்ளிக் கூடங்களைத் தனியாருக்கு விட்டுவிட்டு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் செய்யும் அநியாய வசூலுக்கும், அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று...
Published 08/29/22